நாகை பாரளுமன்ற உறுப்பினர் M.செவ்வராஜ் மறைவு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மஜக துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ப்பு…

மே.14.,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகை பாரளுமன்ற உறுப்பினருமான தோழர் M. செல்வராஜ் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது இறுதி நிகழ்வு அவரது சொந்த ஊரான சித்தமல்லியில் நடைப்பெற்றது.

இதில் மஜக மாநில துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் நடைப்பெற்ற இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி இரங்கல் உரையைற்றினார்.

இதில் திமுக மாநில பொருளாளர் T.R பாலு MP, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, நாகை மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா, நாகை மாவட்ட துணைச் செயலாளர்கள், நாகை பாலமுரளி, ஃபக்ருதீன், திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் முகம்மது, நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#டெல்டா_மண்டலம்
14.05.2024.