முதல்வருடன் இனிய சந்திப்பு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் சந்திப்பு அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள் என வாழ்த்து…

மே.9.,

திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான தளபதி. திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற உற்சாகமிகு இச்சந்திப்பின்போது, மஜக பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S.ரிஃபாயி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது ஃபாரூக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது முதல்வரிடம், டெல்லி செங்கோட்டையுடன் அவர் இருக்கும் வரைகலை செய்யப்பட்ட படத்தை தலைவர் மு.தமிமுன் அன்சாரி கையளித்தார்.

அப்போது, ‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப்போகிறீர்கள் என்பதே இப்படத்தின் விளக்கம் ‘ என தலைவர் மு.தமிமுன் அன்சாரி கூறியதும், முதல்வர் அதை சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு அனைவருக்கும் முதல்வர் அவர்கள் தேனீர் அளித்து உபசரித்தார்.

20 நிமிடங்கள் நடைப்பெற்ற இச்சந்திப்பு மிகுந்த உற்சாகத்துடன் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
09.05.2024.