ஏற்காடு தனியார் பேருந்து விபத்து விரைந்து வந்து இரத்தம் வழங்கிய சேலம் மஜகவினர்….

மே,01

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.

படுதாயம் அடைந்த பலருக்கும் அதிகமான இரத்தம் தேவைப்பட்டது.

தகவல் அறிந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சேலம் மாவட்ட பொருளாளர் ஏ.கே.சதாம் உசேன் அவர்கள் தலைமையில் அம்மாபேட்டை பகுதி செயலாளர் A. சதாம் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்து 30-க்கும் மேற்பட்ட மஜக-வினர் இரத்த தானம் வழங்கினர்.

இன்னும் அதிகமாக இரத்தம் தேவைப்பட்டால் எங்களை அழைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்களிடம் வாக்குறுதி அளித்தனர்.

மஜக-வினரின் இந்த செயலை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர்.

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாவட்டம்
01.05.2024.