தென்சென்னையில்… அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…

ஏப்ரல்.03.,

I.N.D.I.A கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று மத்திய சென்னையிலும், அதை தொடர்ந்து தென் சென்னையிலும் நடைபெற்ற பரப்புரையில் மஜக-வினர் கொடிகளுடன் அணி திரண்டதை பார்த்த உதயநிதி அவர்கள் மஜக-வினரை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.

அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தலைமையில் தென்சன்னை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்ட பொருளாளர் நாகூரான், மாவட்ட துணைச் செயலாளர் ஆலந்தூர் கபீர் மற்றும் மாவட்ட, பகுதி மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வினர் கொடிகளுடன் மஜக சால்வை அணிந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#தென்சென்னை_தொகுதி
#MJK_IT_WING
02.04.2024.