நாகூரில்… மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…

ஏப்ரல்.01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் நாகூர் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், நாகை 29 வார்டு நகர மன்ற உறுப்பினர் M. M.ஜென்னத் பேகம், நாகை வட்டார உலமா சபை தலைவர் S.மக்சூது சாஹிப் ஃபைஜி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் M.செய்யது அனஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் திமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மேலும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத், அவைத்தலைவர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, மாவட்ட அணி நிர்வாகிகள் பிரவீன், அசாருதீன், உமர், இப்ராஹிம், IT சாகுல், மாலிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, முகமது யாசர், இஸ்மாயில், முகமது ஷஃபியுல்லா, நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், ஷமீருதீன், மற்றும் ஜமாத்தார்கள், சான்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
31.03.2024.