கிருஷ்ணகிரி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்பு..

மார்ச்.27.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் எதிரணியில் நமக்கு வாய்ப்பு இருந்தும் கட்சி நலனை விட நாட்டு நலன் தான் முக்கியம் என இந்தியா கூட்டணிக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்ததை குறிப்பிட்டு பேசி வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி, திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான S.A. சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கலீல் பாஷா, அய்யூப் இளைஞர் அணி செயலாளர் மஹபூப் ஷெரிப் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #கிருஷ்ணகிரி_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
26.03.2024.