மஜக தலைமையகத்திற்கு… தமிழ் கேள்வி செந்தில் வேல் வருகை! நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன் என்ற நூலை தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்…

மார்ச்.26.,

பிரபல ஊடகவியலரும், தமிழ் கேள்வி யூடியுப் நிறுவன ஆசிரியருமான திரு. செந்தில் வேல் அவர்கள் இன்று மஜக தலைமையத்திற்கு வருகை தந்தார்.

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்தவர், தான் எழுதிய ‘நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்” என்ற நூலை வழங்கினார்.

தற்போதைய தேர்தல் களத்தில் இந்நூல் மிகப்பெரும் கருத்தாயுதம் என்ற தலைவர் அவர்கள், மஜக-வின் முன்னணி பரப்புரையாளர்கள் 100 பேருக்கு இந்நூலை வழங்குவதாக கூறினார்.

பிறகு தான் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை தொகுப்பை செந்தில் வேலுக்கு வழங்கினார்.

பிறகு இருவரும் சமகால தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினர்.

பிறகு மஜக தலைமையகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்விலும், மஜக நிர்வாகிகளுடன் செந்தில் வேல் அவர்கள் பங்கேற்றார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
26.03.2024

https://www.facebook.com/share/p/yaK1JbSn5LvUGXvf/?mibextid=Nif5oz