நாடாளுமன்ற தேர்தல் 2024… திருப்பூரில்… திமுக மாவட்ட செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….

மார்ச்.20.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக நேற்று (19.03.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் MLA., அவர்களை மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ், மாவட்ட அவை தலைவர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் பாபு, மஜக செயல்பாட்டாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், மூன்றாம் மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மு.க.உசேன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன்

மஜக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராயல் பாட்ஷா, ஈஸ்வரன், ஷேக்அப்துல்லா, யாசர் பாரூக், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் கீரனூர் பாபு, ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் சாகுல், ஒன்றிய பொருளாளர் அரபாத், ஒன்றிய இளைஞரணி முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_மாவட்டம்
20.03.2024.