ST கொரியர் இஃப்தார் பலஸ்தீனர்களுக்காக பிரார்த்திப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

மார்ச்.08.,

பிரபல வணிக நிறுவனமான #ST கொரியர் சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சென்னை – ராயபுரம் – ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.

இதில் #மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

அப்போது கூறியதாவது…

பலஸ்தீன மக்கள் நோன்பு காலத்தில் காலை சஹர் உணவுக்கும், நோன்பு துறப்புக்கும் உணவின்றி தவிக்கிறார்கள்.

அம்மக்களின் தேவைகள் நிறைவேறவும், சுதந்திர பலஸ்தீனம் மலரவும், இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் வீழ்ச்சியடையவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் ‘ என பேசினார்.

இதில் ST கொரியர் நிறுவனர் அன்சாரி, நவாஸ் கனி MP உள்ளிட்ட ST கொரியர் குடும்பத்தினர் பங்கேற்று அனைவரையும் வரவேற்றனர்.

இதில் அரசியல், சமூகம், கல்வி , வணிகம் ஆகிய துறைகளை சேர்ந்த ஆளுமைகளும் பங்கேற்றனர்.

இதில் தலைவர் அவர்களுடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
18.03.24.