குவைத் தமிழர் எழுச்சி மாநாடு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுக்கு குவைத்தில் உற்சாக வரவேற்பு

பிப்.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் ஆறாவது மண்டல மாநாடு “குவைத் தமிழர் எழுச்சி மாநாடு” இன்று 23-02-2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தஸ்மா அரங்கில் நடைபெறுகிறது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MA. Ex.MLA அவர்களும், எழுத்தாளர் சமூகநீதி பேச்சாளர் பேரா.சுந்தரவள்ளி M.Phil அவர்களும், சமூகநீதி பேச்சாளர் ஜீவ சகாப்தன் M.Sc அவர்களும் குவைத் வருகை புரிந்தனர்.

அவர்களுக்கு குவைத் மண்டலம் சார்பாகவும், குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மனிதநேய சொந்தங்கள் சார்பாகவும் உற்சாகமாக வரவேற்பு வழங்கினர்.

தகவல்:
மனிதநேய கலாச்சார பேரவை
#MJK_IT_Wing_Kuwait
குவைத் மண்டலம்
23.02.2024.