டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக…. திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜகவினர் பங்கேற்பு

பிப்.20.,

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் அதன் பொதுச்செயலாளர் தோழர் ஜி.வரதராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் M.ஷேக் அப்துல்லா தலைமையில் மஜக-வினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இதில் மருத்துவ சேவை மாவட்ட செயலாளர் சித்திக் முகமது, ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், மற்றும் நிர்வாகிகள் நூர் முஹம்மது, ஜஹபர் சாதிக், ரியாஸ் அஹமது உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
19.02.2024.