வஃக்பு வாரியத்தை கண்டித்து போராட்டம்… மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் கண்டன உரையாற்றினார்…

பிப்.18.,

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய தவறிய வஃக்பு வாரியத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், துணைச் செயலாளர் பைசல் அஹமது, பட்டுக்கோட்டை நகர செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
17.02.2024.