உத்திரகாண்ட் பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு

பிப்.18.,

உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹலண்ட்பூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்-மதரஸா கட்டிடம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியது.

இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சென்னை புளியந்தோப்பு கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் சித்திக் தலைமையில் புளியந்தோப்பில் நடைப்பெற்றது.

இதில் மஜக மாநில செயலாளர் நாகை முபாரக் தலைமையில் மஜக-வினர் கலந்துக்கொண்டனர்.

மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் உத்திரகாண்ட் அரசை கண்டித்தும், வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்தினை மீறும் பா.ஜ.க அரசினை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.

மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹுர், மாவட்ட துணைச்செயலாளர் M.A.அன்வர் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
17.02.2024.