திருப்பூண்டியில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் v.ஜெக்கரியா அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணிமாவட்ட செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், கிளை செயலாளர் T. ஹாஜா முயுனுதீன், கிளை துணை செயலாளர்கள் s.ஜியாவுதீன், A.செய்யது இப்ராஹிம், வர்த்தக அணி செயலாளர் s.நஜிமுதீன் மற்றும் ஹாஜா, முகமதுஅசரஃப், P. இப்ராஹிம், பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2024.