பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…

300 பேர் பங்கேற்க நீலகிரி மேற்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

மாநில துணைச்செயலாளர் ஜாவித் ஜாபர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்…

ஜன.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் அப்துல் மஜீத் அமீனி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஜாவித் ஜாபர் அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு நீலகிரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 300-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
22.01.2024.