பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க மஜக வடடேற்கு மண்டல ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

ஜன.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், வடமேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநிலத் துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் தலைமையில் நேற்று மாலை ஆம்பூரில் நடைபெற்றது.

இதில் பிப்ரவரி-10, 2024 அன்று 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதம் இன்றி நிரந்தரமாக விடுதலை செய்யக் கோரியும், இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேற்கு மண்டலத்தில் இருந்து 2000-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அப்ரார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் சையது நவாஸ், வேலூர் மாவட்ட பொருளாளர் ராம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடமேற்கு_மண்டலம்
22.01.2024.