உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மஜகவில் இணைந்தனர்..

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலை நோக்கி தமிழகம் முழுவதும் பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுந‌ர்கள் மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமீன் மற்றும் சுதீஷ் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

மனிதநேய ஜனநாயக வழக்கறிஞர் பாசறையில் இணைந்து சட்ட பணிகளை மக்கள் நலனுக்காக சிறப்புடன் பணியாற்ற மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்தினார்.

மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர், மாநில செயலாளர்கள் கோவை. ஜாஃபர், பல்லாவரம் ஷஃபி, நெய்வேவலி இப்ராஹீம் ஆகியோர் வரவேற்று வாழ்தினர்

மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், சலாம், பார்த்தீபன், தாஜுதீன், எஸ்.எம்.நாசர் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING
#மஜக_தலைமையகம்
15.01.24