பிப் 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

திரளானோர் பங்கேற்க மஜக வடசென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு

ஜனவரி.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாஃபர் சாதிக் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், பேரா. சலாம் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள், திருச்சி சிறை முற்றுகை போராட்டம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான எஸ்.எம்.நாசர் அவர்கள் மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் எண்ணூர் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 25,000ரூபாய நிவாரணம் வழங்கவும், CPCL எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட நிலுவையில் உள்ள அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் 20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதம் இன்றி முன் விடுதலை செய்ய கோரி பிப்ரவரி 10 அன்று திருச்சி சிறை முற்றுகை போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கதிர் உசேன், மாவட்ட பொருளாளர் நிஜாம், மாவட்ட துணைச்செயலாளர் காசிம் ஷரீஃப், திருவொற்றியூர் பகுதி செயலாளர் வெங்கடேசன், பகுதி பொருளாளர் ஜீலாணி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
11.01.2023