மஜக சார்பில் கடலூர் மத்திய சிறை நிரப்பும் போராட்டம்… போர்கால அடிப்படையில் தொடங்கிய பணிகள்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக 20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளையும் அடுத்தடுத்து முற்றுகையிட்டு “சிறை நிரப்பு போராட்டத்தை” நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு கடந்த 09.07.2023 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறை நிரப்பும் போராட்டம் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து கடலூர் மத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்வரும் 05.08.2023 அன்று நடைபெற உள்ளது. போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நேற்று கடலூர் நகர அலுவலகத்தில் சிறை நிரப்பும் போராட்டத்திற்கான போஸ்டர் வெளியிடு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் போராட்ட போஸ்டரை வெளியிட மாநில செயலாளர்கள் நாகை முபாரக் மற்றும் நெய்வேலி இப்ராஹிம் ஆகியோர் அதை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இளைஞர் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகுபர், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், நகரச் செயலாளர் சையது மதர், நகரப் பொருளாளர் ஹாரூன் ரஷீத், நகர துணைச் செயலாளர் பாரூக், நகர இளைஞரணி செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.