சேலத்தில் மஜக மண்டல ஆலோசனை கூட்டம்…!

சேலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் இணைந்த மண்டல ஆலோசனை கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் S.A.சையது அகமது பாரூக் தலைமையில் சேலம் மாவட்ட உள் அரங்க கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா மற்றும் மாநில துணை செயலாளர் AJS.தாஜ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நிர்வாக சீரமைப்பு குறித்தும், புதிய கிளைகளை கட்டமைப்பது, புதிதாக கட்சியில் இணைந்து வருபவர்களுக்கு உரிய வாய்ப்பை பகிர்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் சிறைவாசிகள் விடுதலை செய்ய கோரி மஜக சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் “சிறை நிரப்பும்” போராட்டங்களை வலிமையாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், சேலம் மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, கரூர் மாவட்ட செயலாளர் ஷேக் இஸ்மாயில், தர்மபுரி மாவட்ட செயலாளர் ஜவஹர் பாஷா, ஈரோடு மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அந்தியூர் அப்பாஸ், ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சேலம் மாவட்ட நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், கரூர், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மணிப்பூரில், ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளின் துணை கொண்டு நடைபெற்று வரும் கலவரத்திற்கு எதிராக இக்கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.