நெய்வேலி NLC எதிர்ப்பு போராட்டம்… சிதம்பரத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர்களை திரட்டி செல்ல முடிவு..!

நெய்வேலி சுரங்கம் விரிவாக்க திட்டத்திற்கு 25000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்திய நெய்வேலி NLC நிறுவனத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பிப்ரவரி 11 அன்று சுரங்கம் 2 முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்ட முன்னேற்பாடு, மக்களை திரட்டுவது குறித்து கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் போராட்டத்திற்கு 500-க்கும் மேற்பட்ட மக்களை சிதம்பரத்தில் இருந்து திரட்டி செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.