சேலத்தில் மஜக அலுவலகம் திறப்பு… செப்டம்பர் 10 தலைமைச் செயலக பணிகளை துரிதப்படுத்துக! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

ஜூலை:25,

சேலம் மாவட்ட மஜகவில் திரளான இளைஞர்கள் இணைந்து வரும் நிலையில், மாநகரத்தில் உள்ள கிச்சிப்பாளையத்தில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக கருவாட்டு பாலம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான பாபு ஷாகின்ஷா அவர்களும் பங்கேற்றார்.

முன்னதாக இரு சக்கர வாகன ஊர்வலமும் எழுச்சியாக நடைபெற்றது.

அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பிறகு, மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.

அதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் , ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 அன்று மஜக நடத்தும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்களை வரையுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் இப்போராட்டத்திற்கு அதிகமான மக்களை பேருந்துகளிலும், வேன்களிலும் அழைத்து வர இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிறகு அங்கு வந்திருந்த தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட அமைப்புக் குழு தலைவர் சாதிக் பாட்ஷா, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அஸ்லம் கான், அப்ரார் பாஷா, சனாவுல்லா கான், அக்மல் உசேன், ஜான், ஜாபிர் மற்றும் தாஜ்தீன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
25.06.2022