மஜக 14வது ஆம்புலன்ஸ் சேவை! ஜெயங்கொண்டத்தில் அர்ப்பணிப்பு..!

மே-20., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 14-வது ஆம்புலன்ஸ் சேவை அர்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் அக்பர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் #சட்டமன்ற_உறுப்பினர் திரு. க.சொ.க. கண்ணன் அவர்களும், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கோ கருணாநிதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் ஆம்புலன்சை அர்ப்பணிக்க, #ஜமாத்_தலைவர் P. முகம்மது ஷரிப் அவர்கள் தலைமையில் ஜமாத்தினர் பெற்றுக்கொண்டனர்.

அங்கு வருகை புரிந்த முக்கிய பிரமுகர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், அவர்களும் மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்களும், மாநில துணை செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், வல்லம் அஹமத் கபீர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மகரூப் ஆகியோரும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

கொரணா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தாசில்தார் ஆனந்த், நகராட்சி வருவாய் உதவியாளர் சரஸ்வதி, அன்னை தெரஸா நர்சிங் கல்லூரி தாளாளர் முத்து குமரன் ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டது.

எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷர்புதீன், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது அலி, சையது அலி, ஷேக் இஸ்மாயில், மாவட்ட அணி நிர்வாகிகள் சையது பாருக், அப்துல் அஜிஸ், அப்துல் ராஷித் மற்றும் நகரமன் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தாகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_அரியலூர்_மாவட்டம்.
20.05.22