வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருடன் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது சந்திப்பு!

திருப்பத்தூர்.மே.10., வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டு, அதற்கு எதிராக போராடி உயிர் நீத்த மஜக முன்னாள் மாநில துணை செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களது இல்லத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

அவருடன் மஜக மாநில துணைச் செயலாளரும், அம்மாவட்ட மேலிட பொறுப்பாளருமான S.G.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல் ஆகியோரும் உடன் சென்றனர்.

வசிம் அக்ரம் கொலை தொடர்பான காவல்துறை செயல்பாடுகள், வழக்கு நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டது. மஜக தலைமை இவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும், குடும்ப நல நிதி சேகரிப்பிலும் அக்கறை எடுத்து வருவதையும் பொருளாளர் அவர்கள் வசீம் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது வசீமின் சகோதரர் தமிம், ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் நாசிர்கான், மன்சுர் அஹ்மத், மஹல்லா ஜமாத்தார்கள் மற்றும் வசீமின் உறவினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
09.05.2022