
குடந்தை.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சியின் 3-வது வார்டில் ஜாகிரா பேகம் ராஜ் முஹம்மது அவர்களும் 5-வது வார்டில் முகமது யாசீன் அவர்களும் போட்டியிடுகின்றனர்.
இன்று அவர்கள் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், துணை செயலாளர் இப்ராஹிம் ஷா, இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம
03.02.2022