கள்ளக்குறிச்சியில் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்..!

ஜனவரி.27., இந்தியாவின் 73 வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக திருக்கோவிலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உளுந்தூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ஜாவித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவிலூர் நகர செயலாளர் S.சாதிக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர் A.அப்துல்லா மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் K.பயாஸ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டு இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் T.N.முருகன், திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் ஏழுமலை, அஹல சுன்னத்வல் ஜமாத் தலைவர் இப்ராஹிம், திமுக முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுக்கத் அலி, AITUC விழுப்புரம் மாவட்ட செயலாளர் செளரிராஜன், CPI நகர செயலாளர் பஷீர் அகமது, SDPI மாவட்ட செயலாளர் அலிம், SDPI கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், TNTJ நகர செயலாளர் அனீபா, CPM மாவட்ட செயலாளர் செந்தில், புரட்சி பாரதம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சதீஷ் குமார், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் டோமிக் ராஜா, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மஜக கள்ளக்குறிச்சி நகர பொருளாளர் B.ஜாகீர் உசேன், நகர இளைஞரணி செயலாளர் S. சர்தார், நகர மருத்துவரணி S. ஷாரூக், ஊர் ஜாமத்தார்கள் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
26.01.2022