You are here

73வது குடியரசு தின விழா.! உதகையில் தேசிய கொடியேற்றி கபசுர குடிநீர் வழங்கிய மஜகவினர்!

ஜன:26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகையில் மாவட்ட செயலாளர் கமால்தீன், தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் …

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
26.01.2022

Top