You are here

INLP மாநில பொருளாளர் முள்ளான் செய்யதலி அவர்களுக்கு அழைப்பிதழ்..!

நெல்லை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு நிகழ்வாக இந்திய தேசியலீக் கட்சி மாநில பொருளாளர் முள்ளான் செய்யதலி அவர்களை மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது அவர்கள் சந்தித்து ஜனவரி 8 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால், மனித உரிமை பாதுகாப்புஅணி முருகேசன், மருத்துவசேவை அணி துணை செயலாளர் டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லைமாவட்டம்
04.01.2022

Top