You are here

மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..

மதுரை. ஜன.04.,10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜக வினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூட விருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பு மாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.பூமிநாதன், MLA., அவர்களை மஜக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கனி, மாவட்ட துணை செயலாளர் அப்துல் மஜீத், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் பாபு, ஆகியோர் உடன் இருந்தனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாநகர்_மாவட்டம்
03.01.2022

Top