அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் ஏபி நந்தகுமார் அவர்களை ஆதரித்து மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்..!!


பள்ளிகொண்டா.ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் திரு.AP.நந்தகுமார் அவர்களை ஆதரித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள், அணைக்கட்டு தொகுதிக்குப்பட்ட பள்ளிகொண்டாவில் உள்ள பல்வேறு தெருக்களில் வீதி வீதியாக சென்று இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பகுதியில் உரையாற்றிய மஜக பொருளாளர் அவர்கள், சமையல் எரிவாயு விநியோகத்தில் புகுத்தப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடும் நேரடி மானியம் என்னும் திட்டத்தை ரேஷன் பொருள் விநியோகத்திலும் புகுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் எண்ணத்தையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் சந்தை விலையில் அரிசியையும், கோதுமையையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுவார்கள் என்பதையும்,

இந்த நிலை மாற்றம் பெற ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே எடுத்துரைத்தார்..

இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், பள்ளிகொண்டா நகரச் செயலாளர் அஜீஸுரஹ்மான் நகர பொருளாளர் G. சத்தார், நகர துணை செயலாளர்கள் C.முஹம்மத் கவுஸ், PK. நஸ்ரு மற்றும் பல்வேறு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#அணைகட்டு_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
04-04-2021