ஆம்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரையாற்றினார்..!!


வேலூர்.ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் செ.வில்வநாதன் அவர்களை ஆதரித்து ஆம்பூர் மொட்டுக்கொல்லை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உரையாற்றினார், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளின் முக்கியதுவத்தை குறிப்பிட்டு பேசியவர் நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பறி போய் உள்ளதையும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக மேற்கொள்வார் எனவும்,

புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதையும் இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும், அதற்காக ஏப்ரல் 6-ம்தேதி உதயசூரியன் சின்னத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும்,

தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, வேலூர் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன்,இளைஞர் அணி செயலாளர் அக்மல், MJTS செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#ஆம்பூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
03.04.2021