கும்பகோணத்தை தனி மாவட்டம் கோரி அனைத்து கட்சி தொடர்முழக்க_போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!



பிப்.03,

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ம.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டம் நேற்று காந்தி பூங்கா அருகில் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டார்.

இதில் மஜக சார்பாக மாவட்ட செயலாளர்
ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது இப்ராஹிம்,
இப்ராஹிம் ஷா, குடந்தை ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது மற்றும் தஜ்மல், ஹசேன் உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மஜக பொதுச் செயலாளரை குடந்தை சுற்றுப்பயணத்தின் போது நேரில் சந்தித்து கும்பகோணத்தை தனி மாவட்ட கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
02/02/2021