இலக்கிய நிகழ்ச்சிகளையும் அறிவுசார் போட்டிகளையும் முன்னெடுக்க வேண்டும்! காயல்பட்டினம் YUF வரவேற்பு நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


ஜன.25.,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு காயல்பட்டினத்தில் இளைஞர் ஐக்கிய முன்னனி (YUF) சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருடன் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் தைமியா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், ஆகியோரும் வருகை புரிந்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர், செயலாளர், மூத்த உறுப்பினர்கள், மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு இளைஞர் முன்னணியின் கோரிக்கையான காயல்பட்டினம் தனி தாலுகா என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசியதற்காக நன்றி தெரிவித்தனர்.

மேலும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு ஒன்றையும் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களிடம் அளித்தனர்.

இறுதியாக ஏற்புரை ஆற்றிய மஜக பொதுச்செயலாளர் அவர்கள் இளைஞர் ஐக்கிய முன்னனியின் செயல்பாடுகளை சிலாகித்து பாராட்டி பேசினார்,

உங்களது பணிகளும் சேவைகளும் மென்மேலும் தொடர வேண்டும் உங்கள் முன்னணி பவளவிழா காண வேண்டும் என்றும் அந்த பவள விழாவிற்கு நீங்கள் எங்களையும் அழைக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் இலக்கிய நிகழ்ச்சிகள் குறைந்து வருவதை சுட்டிக் காட்டியவர், YUF சார்பில் அதை முன்னெடுக்க வேண்டும் என்றும், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் போன்ற அறிவுசார் நிகழ்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் பேசினார்.

அவரது உரையும், வருகையும் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக YU F நிர்வாகிகள் கூறினர்.

இந்நிகழ்வில் மஜக மாநிலத் துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது நஜிப் , காதர் பாட்சா, ராசுக் குட்டி, காயல் நகர செயலாளர் இப்னு மாஜா, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாஹிப், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
22.01.2021