இந்திய குடியரசு தினத்தை இரத்ததானம் செய்து கொண்டாடிய குவைத் மஜகவினர்!


குவைத். ஜன.24,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக 72ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டு இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் 22/01/2021 வெள்ளிக்கிழமை அன்று மண்டல செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர்.

குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மஜக பொதுசெயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MA, MLA., அவர்கள் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் குவைத் மண்டல MKP சார்பாக வழங்கப்பட்டது.

குருதி கொடை அளிப்பவர்களை வரிசை படுத்தி அவரவர்களுக்கு உண்டான தளத்தை சென்றடைய வழிகாட்டியதது முதல் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்று கவுரவப்படுத்தியது வரை மண்டல நிர்வாகிகளும், தொண்டரணியினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஸ்பான்சர் WINWAY Groups நிறுவனர் சகோ.முசாவுதீன் அவர்கள் குருதி கொடை அளித்தவர்களுக்கு Kit மற்றும் உணவுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். அதை போன்றே NQG ஷாஹின் ஷா, பாலிவுட் சீனிவாசன், இன்டெர்னிட்டி சையது உள்ளிட்டோர்கள் குளிர்பானங்களும், சிற்றுண்டிகளை வழங்கினர்.

இம்முகாமில் 124 நபர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசைன் அவர்கள் நன்றியுரை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

தகவல்,

#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MJKITWING
#குவைத்_மண்டலம்.
22.01.2021