நாச்சிகுளத்தில் ஜனவரி 21 தஞ்சை பச்சைக்கொடி பேரணிக்கு மஜக சார்பில் நேரில் அழைப்பு! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!


ஜன.20,
தஞ்சையில் நாளை நடைபெற உள்ள பச்சை கொடி பேரணிக்கு நாச்சிகுளம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேரில் சென்று அழைப்புகள் கொடுக்கப்பட்டது.

கடைத்தெருவில் துண்டு பிரசுர விநியோகமும் அதனை தொடர்ந்து விவசாயி சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து நாளை விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மஜக மாநில செயலாளர் தாஜுதீன் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் கிளை செயலாளர் ரியாஸ் அகமது, துணை செயலாளர்கள் இம்தியாஸ், இஜாஸ், இம்ரான் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.