ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி… குடந்தையில் மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர பரப்புரை! மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!


ஜன.20,

மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இன்று குடந்தையில் துண்டு பிரசுர பரப்புரை மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்கள் பங்கேற்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார்.

பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தஞ்சையில் நடைப்பெறும் பேரணியில் தஞ்சை வடக்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளனோர் சென்று பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வில் மஜக துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, குடந்தை ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், குடந்தை நகர செயலாளர் ராஜ்முகமது, அசன், தாவூத் மேலும் மஜக சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
19.01.2021