You are here

பிலிப்பைன்சில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்.!தலைமை செயலாளரிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!


டிச.30,

மருத்துவப் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற தமிழக மாணவர்கள் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் விமான சேவை கிடைக்காமல் தாயகம் திரும்ப வழியின்றி தவிக்கும் செய்திகள் வலைதளங்களில் வருகிறது.

இது குறித்து இன்று மதியம் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இது குறித்து இந்திய வெளியுறவு துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இது குறித்து விசாரித்து உரிய முயற்சிகள் எடுப்பதாக தலைமை செயலாளர் அவர்கள் கூறினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைலையகம்
30-12-2020

Top