சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மார்பளவு வெள்ளநீரில் இரண்டாம் நாளாக உணவு விநியோகம்! களத்தில் மஜக பேரிடர் மீட்பு குழு!


டிச.06,
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான இந்திரா நகர், பள்ளிப்படை, பூதகேணி உள்ளிட்ட மழை வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு இரண்டாவது நாளாக இன்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழு சார்பாக உணவு விநியோகம் செய்யப்பட்டது.

சுமார் 1500 க்கும் அதிகமான உணவு பொட்டலங்கள் மஜக சார்பில் தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் தங்கி இருந்த மக்களுக்கு மார்பளவு தண்ணீரில் இறங்கி சென்று மஜக பேரிடர் மீட்பு குழுவினரால் விநியோகம் செய்யப்பட்டது.

இப்பணிகளை சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர மஜக நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.