நாகை துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்! மு தமிமுன் அன்சாரி MLA நேரில் பார்வையிட்டார்!


நவம்பர்-23

நிவர் புயல் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அங்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து துறைமுக பொறுப்புத் தலைவர் கேப்டன் J.மானெக் ஷா அவர்களை சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார்.

அங்கிருந்தவாறு தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசினார். அரசு தரும் வழிகாட்டல்களை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தான் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.