சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி விருதுநகர் மாவட்ட காவல்துறை துணை கண்கானிப்பாளரிடம் மஜகவினர் மனு!!


நவ:06.,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலையோர சிறு குறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் எனக் கூறி அந்த கடைகளை காவல்துறையை அப்புறப்படுத்தியது இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதை சரிசெய்து தருமாறும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கையை வைத்தனர்.

அதனடிப்படையில் விருது நகர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அவர்களை மஜக மாவட்ட செயலாளர் கண்மனி காதர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் ஷாஜகான், ராஜபாளையம் ஒன்றியச் செயலாளர் தமிமுன் அன்சாரி, ஆகியோர் சந்தித்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரித்தார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஸ்ரீவில்லிப்புத்தூர்_நகரம்
#விருதுநகர்_மாவட்டம்
06.11.2020