நெல்லிக்குப்பத்தில் மஜக சார்பில் முப்பெரும் விழா! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


அக்-24, கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கட்சி கொடியேற்று விழா, மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது.

முன்னதாக நெல்லிக்குப்பம் நுழைவாயிலில் நகர #மஜக சார்பாக வாகன வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தொடர்ந்து தபால் நிலையம், தைக்கால் ஆகிய இடங்களில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

அடுத்ததாக பிரதான சாலையில் மாவட்ட- நகர அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன் பிறகு நூர் மஹாலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

முதல் கட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அவ்வூரை சேர்ந்த சமூக சேவகர்கள், சாதனையாளர்களுக்கும் மஜக சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிறகு அவ்வூர் ஜமாத்தார்கள் வருகை தந்து பொதுச்செயலாளரை சந்தித்து பேசினர். அப்போது மஜகவின் பணிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.

மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், SDPI ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக பொதுச்செயலாளரை சந்தித்து பேசினர்.

தொடர்ந்து மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான திட்டமிடல்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாரும், மாவட்ட மேலிட பொருப்பாளருமான நெய்வேலி இப்ராகிம், மாநில துணை் செயலாளர் நாகை முபாரக், தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் கான், யாசீன், தலைமை கழக பேச்சாளர் மன்சூர், IKP மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் சதாம், மன்சூர், IKP மாவட்ட துணை செயலாளர் ஹலில் ரஹ்மான், நகர செயலார் அப்துல் அஜிஸ், பொருளாளர் ரியாசத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
24.10.20