தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து! விருதுநகர் மஜக சார்பில் துண்டறிக்கை விநியோகம்!!

செப்.26.,
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடந்த 16.09.2020 அன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

சட்டமன்றத்தில் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையினை விருதுநகர் மாவட்ட மஜக சார்பில் துண்டறிக்கையாக தயார் செய்து இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள் முழுவதும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.

இதில் மாவட்டத்திற்குட்பட்ட மஜகவின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் வெவ்வேறு இடங்களில் பங்கேற்று விநியோகம் செய்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்.
25.09.2020