மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!


செங்கை.செப்.20.,

தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நீட்டுக்கு பலியான மாணவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர் மத்திய அரசுக்கு எதிராகவும், நீட்டை தமிழகத்தில் தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள்
தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அனகை அப்துல்லா, ஆலந்தூர் சலீம், மாவட்ட அணி நிர்வாகிகள் எச்.அப்துல் சமது, த.அப்துல்லா, அனகை சலிம், நகர நிர்வாகிகள் இஸ்மாயில், கமாலுதீன், மோகன், நரேஷ், தமிழ், சேக், முஜிபுர், அன்சாரி உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
20-09-2020