மாணவர் விக்னேஷ் தற்கொலை! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

மாணவர் விக்னேஷ் அவர்களின் மரணம் நீட் தேர்வுக்கு எதிரான நடைமுறை சிக்கல்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

இத்தருணத்தில் ஒன்றை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

தற்கொலை இதற்கு தீர்வல்ல. இது தங்களை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவ, மாணவிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை , தற்கொலை எதிர்ப்பு தினமான இன்று உறுதி மொழியாக முன்னெடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக் கொள்கிறோம்.

மாணவர் விக்னேஷ் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
10.09.2020