நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்.!

நாகை.ஆகஸ்ட்.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூரில் இன்று மாவட்டச் செயலாளர் ரியாஸ் முன்னிலையில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மாவட்டச்செயலாளர் ரியாஸ் மற்றும் துணைச்செயலாளர் முன்சி.யூசுப்தீன் ஆகியோர் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செய்யது அஹமது, பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், பேரூர் பொருளாளர் சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த இரு மாதங்களாக தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
23-08-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.