மஜக சார்பில் பள்ளிவாசலில் முககவசங்கள் விநியோகம்.!


ஆகஸ்ட்.22.,

திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கேந்தி ஊராட்சி பகுதியாகும், இங்கு 10 ஆயிரத்திற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட பள்ளிவாசல் இயங்குவதால், சமூக இடைவெளியுடன் அரசு விதிகளை பின்பற்றி தொழுகை நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா சிறப்பு தொழுகையை முன்னிட்டு, பள்ளிவாசல் அருகில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பணியை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

இந்நிகழ்வில் கிளை செயலாளர் அன்வர் தலைமையில் தாவூத் உள்ளிட்ட மஜகவினர் முக கவசங்களை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
21-08-2020