மஜக திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.!


திருச்சி.ஆகஸ்ட்.13.,

திருச்சியில் வேகமாக பரவி வரும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிளையின் சார்பாக இரண்டாம் கட்டமாக நடைபெற்றது,

நிகழ்வுக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) மாவட்டச்செயலாளர் G.K.காதர் அவர்கள் தலைமை தாங்க, மஜக திருச்சி மாவட்டச் செயலாளர் பாபுபாய் அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்து அரியமங்கலம், உக்கடை போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஜமாலுதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாவட்ட வணிகர் சங்க (MJVS ) செயலாளர் அபூபக்கர் சித்தீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்பாஸ் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மற்றும் அரியமங்கலம் கிளையின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
13/8/2020