நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டம் கூடலூரில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மஜகவினர்!!


நீலகிரி.ஆக.13.,

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கூடலூர் கோக்கால் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.

மஜக தொண்டர்களின் தன்னார்வப் பணியை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
13.08.2020