குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் மஜக சார்பில் கிளை அலுவலகம் திறப்பு!

கன்னியாகுமரி-ஆகஸ்ட்.08.,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கிளை அலுவலகம் திறக்கப்பட்டது.

திருவிதாங்கோடு பேருராட்சி கிளைச் செயலாளர் நாசர் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் ருபிகர் அலி முன்னிலையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் அவர்கள் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன், திருவிதாங்கோடு பேரூராட்சி துணை செயலாளர் பிரின்ஸ், மாநகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
07-08-2020

Top