அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா!!

ஜுன்.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி மண்டிக்குளம் பகுதியில் பயணிகள் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா மஜக மாவட்டச் செயலாளர் முனைவர் முபாரக்அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டப் பொருளாளர் சேக் இஸ்மாயில், முன்னிலை வகித்தார், மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் K.S.ராமநாதன், அவர்கள் கலந்து கொண்டு தொழிற்சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஆட்டோ தொழிற்சங்கத்தின் செயலாளர் முருகன், நன்றியுரையாற்றினார்.

இதில் அறந்தாங்கி நகர தொழிற்சங்க தலைவர் சோலைமலை, நகர துணை செயலாளர் துரைராஜ், நகர செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்முஜி, சீனிவாசன், கலந்தர் மைதீன், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் முகம்மது ராவுத்தர், பொருளாளர் யாஸின், துணை தலைவர் வெள்ளைச்சாமி, துணை செயலாளர்கள் ஜலாலுதீன், நைனா முகம்மது, சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்
27.06.2020

Top